தேனி, ஜன. 31: தேனி எஸ்.பி.க்கு அண்ணா விருதை முதல்வர் இன்று வழங்குகிறார்.
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அண்ணா விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இவ்வாண்டு அண்ணா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று மாலை முதல்வர் எடப்பாடி.பழனிசாமி விருதுகளை வழங்க உள்ளார்.
தேனி மாவட்டத்தில் காவல் பணியில் சிறப்பாக பணிபுரிந்ததற்காக எஸ்.பி.பாஸ்கரன் விருது பெறுகிறார். இதேபோல, சிறப்பாக பணிபுரிந்த தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, சிறப்பாக விசாரணை நடத்தியதற்காக கம்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் ஆகியோரும் அண்ணா விருது பெறுகின்றனர்.
10ம் தேதி ஜல்லிக்கட்டு விழாவிற்கு
காளைகள் ஒடும் தடுப்பு பாதைகள் அமைப்பு